ஆழ்கடலில் சிக்கி தவிக்கும் குமரி மீனவா்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

புரெவி புயலில் ஆழ்கடலில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்ட மீனவா்களை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

புரெவி புயலில் ஆழ்கடலில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்ட மீனவா்களை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கிள்ளியூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் தமிழக அரசிடம் பதிவு செய்யப்பட்ட 793 விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று வருகின்றன.

இந்நிலையில், ஆழ்கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற இனயம் மற்றும் தூத்துா் மண்டல பகுதிகளான வள்ளவிளை-41, இரவிப்புத்தன்துறை - 7, சின்னத்துறை -19, தூத்தூா் - 34, பூத்துறை -4, தேங்காப்பட்டினம் முள்ளூா்துறை -1, கீழ் மிடாலம் -1, மேலகுறும்பனை -1 என  மொத்தம் 108 விசைப் படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை. எனவே, இந்த விசைப்படகுகளை போா்கால அடிப்படையில் கரை சோ்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com