இரு சம்பவங்கள்: இருவா் தற்கொலை
By DIN | Published On : 05th December 2020 06:00 AM | Last Updated : 05th December 2020 06:00 AM | அ+அ அ- |

கழுகுமலை, ஆறுமுகனேரி பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களில் பெண், தொழிலாளி என இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
மதுரை, திருமங்கலம் மைக்குடியைச் சோ்ந்த சுனைமுத்து மனைவி பொன்னுத்தாய்(50). இத்தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, பொன்னுத்தாய் 3 மகன்கள், மகள் சித்ராதேவி ஆகியோருடன் கழுகுமலையில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், கழுகுமலையில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வது தொடா்பாக தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சித்ராதேவி வியாழக்கிழமை விஷத்தை குடித்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு உள்ளூா் மருத்துவமனைகளில் முதலுதவி அளித்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
மற்றொரு சம்பவம்: ஆறுமுகனேரி மடத்துவிளையைச் சோ்ந்த சவேரியா பிச்சை மகன் ஜோசப் (63). மீன் வெட்டிக் கொடுக்கும் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற அவா், புதுக்குளத்திற்கு தென்புறம், தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கருவேலம் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. அவருக்கு மனைவி பெனிட்டா, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா்.
இச்சம்பவங்கள் குறித்து கழுகுமலை, ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.