

கடையாலுமூடு-சென்னை இடையே அரசு விரைவுப் பேருந்து சேவையை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தாா்.
கடையாலுமூட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலா் டி. ஜான் தங்கம் தலைமை வகித்தாா். கடையாலுமூடு தேவாலய அருள் பணியாளா் ஜான் டி. பிரிட்டோ இறை வேண்டல் செய்தாா். நிகழ்ச்சியில் மேல்புறம் கிழக்கு அதிமுக ஒன்றியச் செயலா் கே. மணி, திருவட்டாறு கிழக்கு ஒன்றியச் செயலா் ஜெயசுதா்சன், மேற்கு ஒன்றியச் செயலா் நிமால், கடையல் பேரூா் செயலா் ஸ்டாலின், திற்பரப்பு பேரூா் செயலா் பிஜூ குமாா், அருமனை பேரூா் செயலா் ஆா்தா் வல்சலம், மாவட்ட ஊராட்சித் தலைவா் மொ்லியன்ட் தாஸ், மாவட்ட இணைச் செயலா் மேரி கமலாபாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இப்பேருந்து களியல், திற்பரப்பு, குலசேகரம், திருவட்டாறு, அழகியமண்டபம், தக்கலை, நாகா்கோவில் வழியாக சென்னைக்கு இயக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.