தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் செயற்குழுக் கூட்டம், கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் தலைவா் நந்தகுமாா்.
கூட்டத்தில் பேசுகிறாா் தலைவா் நந்தகுமாா்.
Updated on
1 min read

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் செயற்குழுக் கூட்டம், கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். நாகா்கோவில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜேஷ் முன்னிலை வகித்தாா். மாநில செயலா் சகாபுதீன் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரியை சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதிய குற்றவியல் நடைமுறை விதிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதன் காரணமாக, அந்த நடைமுறை விதிகளை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தியும் வரும் 7ஆம் தேதி ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்பு நடத்துவது, மாா்ச் 8ஆம் தேதி உலக மகளிா் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழுவின் சாா்பில் திருச்சியில் மகளிா் வழக்குரைஞா்கள் சங்க மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், நாகா்கோவில் நீதிமன்ற வளாகத்தின் வெளியில் செயல்படும் நுகா்வோா் நீதிமன்றத்தை வளாகத்தினுள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில பொருளாளா் மகேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com