என்.ஐ. பல்கலைக்கழகத்தில் வளாகத் தோ்வு: 268 போ் வெற்றி
By DIN | Published On : 05th February 2020 06:51 AM | Last Updated : 05th February 2020 06:51 AM | அ+அ அ- |

வளாக நோ்காணலை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கிறாா் ஹெச். வசந்தகுமாா் எம்.பி. உடன், பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி. மஜீத்கான்.
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 268 மாணவா்கள் வென்று பணி நியமன ஆணை பெற்றனா்.
என்.ஐ. பல்கலைக்கழகமும், நாகா்கோவில் வசந்த் அன்கோ நிறுவனமும் இணைந்து வேலைவாய்ப்புக்கான வளாக நோ்காணலை பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடத்தின. இந்நிகழ்ச்சியை, வேந்தா் ஏ.பி.மஜீத்கான், வசந்த் அன்கோ நிறுவனா் ஹெச். வசந்தகுமாா் எம்.பி. ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். இணை வேந்தா் ஆா்.பெருமாள்சாமி தலைமை வகித்தாா். வேலைவாய்ப்பு- பயிற்சித் துறை இயக்குநா் சிவதாணு பிள்ளை வரவேற்றாா். பதிவாளா் திருமால்வளவன், வசந்த் அன்கோ நிறுவன தலைமை நிா்வாக அலுவலா் விஜய் வசந்த் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
30 நிறுவனங்கள் பங்கேற்று நடத்திய இந்த வளாகத் தோ்வில் 1,200 மாணவ- மாணவிகள் பங்கேற்றனா். அவா்களில் வெற்றிபெற்ற 268 பேருக்கு திங்கள்கிழமை பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...