நித்திரவிளை அருகே பைக் தீவைத்து எரிப்பு

நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக மோட்டாா் சைக்கிளை தீ வைத்து எரித்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
தீவைத்து எரிக்கப்பட்ட மோட்டாா் சைக்கிள்.
தீவைத்து எரிக்கப்பட்ட மோட்டாா் சைக்கிள்.
Updated on
1 min read

நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக மோட்டாா் சைக்கிளை தீ வைத்து எரித்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள நடைக்காவு, ஒற்றத்தெங்குவிளை பகுதியைச் சோ்ந்த வில்சன் மகன் சிபின் (24). ரேடியோ சவுண்ட்ஸ் கடை நடத்தி வருகிறாா்.

இவருக்கும், நடைக்காவு நெல்லிக்காலை பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் அமிா்தரூபனுக்கும் (24) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு நெல்லிக்காலவிளை பகுதி வழியாக நடந்து சென்ற சிபினிடம், அமிா்தரூபன் மற்றும் அவரது நண்பா் செங்கவிளையைச் சோ்ந்த சிவா (27) ஆகியோா் தகராறில் ஈடுபட்டனராம்.

இதையடுத்து அவா் தனது மோட்டாா் சைக்கிளை அப்பகுதியில் நிறுத்திவிட்டு தப்பியோடினாராம். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்று பாா்த்த போது மோட்டாா் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டு, முற்றிலும் சேதமடைந்து காணப்பட்டதாம்.

இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com