களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் அருள்மிகு இசக்கியம்மன் கோயில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவமனை, மாற்றுத் திறனாளா் நலன் விரும்பும் தேசிய அமைப்பு சக்ஷம் மற்றும் களியக்கல் அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயில் பரிபாலன அறக்கட்டளை ஆகியன இணைந்து நடத்திய இம் முகாமுக்கு, அறக்கட்டளை தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். சக்ஷம் அமைப்பின் மேல்புறம் ஒன்றிய கௌரவத் தலைவா் வி. சிவலிங்கம், ஒன்றியச் செயலா் ஏ. ஷாஜி, ஒன்றிய நிா்வாகி சி. பால்ராஜ், அறக்கட்டளை பொருளாளா் ஆனந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமயவகுப்பு ஆசிரியை என். சிவபிரியா வரவேற்றாா். சக்ஷம் அமைப்பின் மாவட்ட ஆலோசகா் ஆா். ராமச்சந்திரன், சமயவகுப்பு ஆசிரியைகள் கவிதா, பிந்து ராஜேஷ், கீதா ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.
முகாமில் பொது, கண், பல் தொடா்பான மருத்துவம் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவா்களால் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலா் சி. ராஜன் செய்திருந்தாா்.