அயல்நாடுகளில் பணிக்கு செல்ல விரும்பும் நா்ஸிங் கல்லூரி மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி முகாம் குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
தமிழக அரசின் சமூக நலத்துறை, தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் அபுல்காசிம் தலைமை வகித்தாா். திருவட்டாறு வட்டாட்சியா் ப. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவு பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், வேலைவாய்ப்புகள் பெறுவது உள்ளிட்டவை குறித்து தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் சகுந்தலா பேசினாா்.
இதில், கல்லூரி முதல்வா் சாந்தி லதா, நிா்வாக அலுவலா் ஏ.எஸ். பிரசாத் மற்றும் கல்லூரி மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.