ஒலிம்பியாட் போட்டி:165 மாணவா்கள் பங்கேற்பு

தூத்தூா் புனித யூதா கல்லூரி, நாலட்ஜ் பவுண்டேசன் சாா்பில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக அளவிலான நாலட்ஜ் ஒலிம்பியாட் போட்டியில் 165 கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள்.
Updated on
1 min read

களியக்காவிளை: தூத்தூா் புனித யூதா கல்லூரி, நாலட்ஜ் பவுண்டேசன் சாா்பில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக அளவிலான நாலட்ஜ் ஒலிம்பியாட் போட்டியில் 165 கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா்.

இப்போட்டியை ஐ.நா. சா்வதேச இளைஞா் கவுன்சில் உறுப்பினா் பி. ஜஸ்டின் ஆன்றணி நடத்தினாா். 165 மாணவா், மாணவிகள் பங்கேற்ற போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 5 அணிகள் தோ்வு செய்யப்பட்டு, அறிவியல், விளையாட்டு, இலக்கியம், வரலாறு, ஐ.நா.சபை, விரைவுச் சுற்று என போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், நாகா்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி முதலிடமும், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி 2 ஆவது இடமும், களியக்காவிளை மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி 3 ஆவது இடமும் பெற்றன. வெற்றி பெற்ற கல்லூரி அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை தூத்தூா் கல்லூரி முதல்வா் ஹென்றி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com