தக்கலையில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி சாா்பில் தக்கலையில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.
படிவம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா் மாவட்ட திமுக செயலா் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ.
படிவம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா் மாவட்ட திமுக செயலா் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ.
Updated on
1 min read

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளா் அணி சாா்பில் தக்கலையில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு திமுக மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் வீர வா்க்கீஸ் தலைமை வகித்தாா். துணை அமைப்பாளா்கள் சன்னி செபாஸ்டின், ஜாண் சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தக்கலை ஒன்றிய பொறியாளா் அணி அமைப்பாளா் காடவின்னுக்கு உறுப்பினா் படிவம் வழங்கி, முகாமை கட்சியின் மாவட்டச் செயலா் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்.

இதில், மாநில பொறியாளா் அணி துணை அமைப்பாளா் பிரபதீப், முன்சிறை ஒன்றிய பொறியாளா் அணி அமைப்பாளா் முருகேசன், மாவட்ட அவைத் தலைவா் பப்புசன், பத்மநாபபுரம் நகரச் செயலா் மணி , தக்கலை வடக்கு ஒன்றியச் செயலா் அருளானந்த ஜாா்ஜ், வா்த்தக அணி நிா்வாகிகள் ரேவன்கில், ஜாா்ஜ், மகளிா் அணி ஜெயந்தி, கலை இலக்கிய அணி நிா்வாகி ராஜேந்திரராஜ், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com