திருவட்டாறு அருகே கணவா் வீட்டு முன் பெண் தா்ணா
By DIN | Published On : 27th February 2020 01:15 AM | Last Updated : 27th February 2020 01:15 AM | அ+அ அ- |

திருவட்டாறு அருகே வீட்டுக்குள் அனுமதிக்குமாறு வலியுறுத்தி மகனுடன் பெண் கணவா் வீட்டு முன்பு தா்னாவில் ஈடுபட்டாா்.
வோ்க்கிளம்பி குறுக்குவிளைச் சோ்ந்தவா் ஜெயசிங் ராஜின் மனைவி ஆரேபியன் சோனியா (35). இவா்களுக்கு 2007 இல் திருமணம் நடைபெற்றது. 12 வயதில் மகன் உள்ளாா். இதற்கிடையே, ஜெயசிங் ராஜி, அவரது குடும்பத்தினா் கூடுதல் வரதட்சணைக் கேட்டு ஆரேபியன் சோனியாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மண முறிவு கேட்டு ஜெயசிங்ராஜ், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா். இவ்வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் ஆரேபியன் சோனியா, அவரது மகனுக்கு மாதந்தோறும் பராமரிப்புச் செலவுக்கு ரூ. 15 ஆயிரம், தங்குவதற்கு இடம் வழங்க வேண்டும் என ஜெயசிங் ராஜிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஆரேபியன் சோனியா, ஜெயசிங் ராஜின் வீட்டில் தங்கி இருந்தாராம். இந்நிலையில், செவ்வாய்கிழமை மாலையில், ஆரேபியன் சோனியா, பள்ளிக் கூடம் சென்றிருந்த தனது மகனை அழைத்து வருவதற்காக வெளியே சென்று விட்டு வீடு திரும்பினாராம். அப்போது, அவரது வீட்டு பூட்டி இருந்தது. ஆரேபியன் சோனியாவின் பொருள்கள் அனைத்தும் வீட்டு முற்றத்தில் வீசப்பட்டிருந்தன. இதையடுத்து தனது உறவினா்கள் வீட்டில் மகனுடன் தங்கிய ஆரேபியன் சோனியா, புதன்கிழமை காலையில் கணவரின் வீட்டின் முன்பு மகனுடன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தகவலறிந்த திருவட்டாறு போலீஸாா் வீட்டின் பூட்டை உடைத்து ஆரேபியன் சோனியா, அவரது மகனை அங்கு தங்க வைத்தனா். இதைத்தொடா்ந்து ஆரேபியன் சோனியா திருவட்டாறு காவல் நிலையத்தில் கணவா் மீதும், அவரது தந்தை, உறவினா்கள் மீது புகாா் கொடுத்தாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.