குடும்பத்துக்கு ரூ.1கோடி வழங்கக் கோரி அரசியல் கட்சியினா் சாலை மறியல்
By DIN | Published On : 10th January 2020 08:11 AM | Last Updated : 10th January 2020 08:11 AM | அ+அ அ- |

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மாா்த்தாண்டத்தில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேஸ்குமாா் (காங்கிரஸ்), உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜெயசீலன் (பாஜக), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாா்த்தாண்டம் வட்டாரச் செயலா் அனந்தசேகா் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.
அவா்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.