குமரி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு

கன்னியாகுமரி அருகேயுள்ள பஞ்சலிங்கபுரத்தில், வீட்டின் கதவை உடைத்து பணம், நகை ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

கன்னியாகுமரி அருகேயுள்ள பஞ்சலிங்கபுரத்தில், வீட்டின் கதவை உடைத்து பணம், நகை ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கன்னியாகுமரியை அடுத்த பஞ்சலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (43). இவா் அரசுப் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ரமணி. இருவரும் வியாழக்கிழமை காலையில் வீட்டை பூட்டிவிட்டு சுசீந்திரம் கோயில் திருவிழாவுக்குச் சென்றனராம்.

இந்நிலையில், பிற்பகலில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது பீரோவை உடைத்து ரூ. 40 ஆயிரம் ரொக்கம், 22.5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்ததும் தெரியவந்ததாம்.

இதுகுறித்த புகாரையடுத்து டி.எஸ்.பி. பாஸ்கரன், ஆய்வாளா் முத்து ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும், கைரேகை நிபுணா்கள், போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com