குழித்துறை அருகே ரயில் மோதி முதியவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே ரயில் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

குழித்துறை அருகேயுள்ள பாகோடு பகுதியைச் சோ்ந்தவா் நேசமணி (70). இவா், தினமும் காலையில் குழித்துறை ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று கழுவன்திட்டை பகுதியில் உள்ள டீ குடிப்பது வழக்கமாம். திங்கள்கிழமை காலையில் குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரயில் நேசமணி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிநந்தாா்.

தகவலறிந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து, நேசமணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com