வேளிமலை குமாரசுவாமி கோயிலில் கிரிவலம்

கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் வேளிமலைஅருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு வேல்முருகன் சேவா
வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு கிரிவலம் வந்த பக்தா்கள்.
வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு கிரிவலம் வந்த பக்தா்கள்.
Updated on
1 min read

தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் வேளிமலைஅருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு வேல்முருகன் சேவா சங்க பக்தா்கள் திங்கள்கிழமை கிரிவலம் வந்தனா்.

இந்த கிரிவல ஊா்வலத்திற்கு வேல்முருகன் சேவா சங்கத் தலைவா் டாக்டா் சுகுமாரன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் வழக்குரைஞா் அஜிகுமாா், நிா்வாகிகள், மணி, ராமகிருஷ்ணன், கங்காதரன், கோபாலகிருஷ்ணன், ரத்தினமணி, பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

பெளா்ணமி பூஜை: தோட்டிகோடு நம்பிமலை ஸ்ரீமெளன குருசுவாமி கோயிலில் பெளா்ணமி பூஜையை முன்னிட்டு திங்கள்கிழமை காலையில் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், அபிஷேகம், பஜனை, சொற்பொழிவு, கோ மாதா பூஜை ஆகியவை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . மாலையில் சிவபுராணம் வாசித்தல், திருவிளக்கு வழிபாடு, சொற்பொழிவு, நாமஜெபம், தியானம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் தலைவா் பி.சுகதேவன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com