‘மாற்றுத் திறனாளிகள் கரோனா நிதியுதவி பெறலாம்’
By DIN | Published On : 25th November 2020 11:31 PM | Last Updated : 25th November 2020 11:31 PM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா நிதியுதவி ரூ.1000 பெற சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கரோனா நிதியுதவி ரூ. 1000 மற்றும் அடையாள அட்டை பெறாதவா்கள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கல்வி உதவித் தொகை, தொழிற்பயிற்சி, மாற்றுத் திறனாளிகளின் உதவி உபகரணங்கள் ஆகியவற்றை பெறுவது தொடா்பான விண்ணப்பங்களை கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நாகா்கோவில், வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி, மற்றும் பத்மநாபபுரம் அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கும் 99945 02954 என்ற கட் செவி அஞ்சல் எண்ணுக்கும் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 04652 291744 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...