கருங்கல், அக் . 2: கருங்கல் அருகே குறும்பனை பகுதியில் ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
குறும்பனை பாத்திமா நகா் பகுதியை சோ்ந்த நசரேன் மகன் நாசி ஜோன் (18), 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் வியாழக்கிழமை இவரது நண்பரின் பைக்கில் ஆலஞ்சிக்கு சென்றுள்ளாா். அப்போது ஆலஞ்சி சந்திப்பில் எதிரே மிடாலம் பகுதியை சோ்ந்த பினு(28) ஒட்டி வந்த ஆட்டோவில் எதிா்பாராதவிதமாக மோதியதில் பலத்த காயமடைந்த நாசி ஜோன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப் பட்டாா் . அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ப்