விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு
By DIN | Published On : 19th October 2020 12:43 AM | Last Updated : 19th October 2020 12:43 AM | அ+அ அ- |

மாா்த்தாண்டம் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கசவன்விளை பகுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (70). இவா், கடந்த இரு நாள்களுக்கு முன்பு விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்தாா்.
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...