பெண் துணை வட்டாட்சியா் உள்பட மேலும் 75 பேருக்கு கரோனா: 4 போ் பலி
By DIN | Published On : 11th September 2020 06:01 AM | Last Updated : 11th September 2020 06:01 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் பெண் துணை வட்டாட்சியா் குடும்பத்தினா் உள்பட மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகா்கோவில் பெண் துணை வட்டாட்சியா் மற்றும் அவரது குடும்பத்தினா் 4 போ் உள்பட மேலும் 75 பேருக்கு பாதிப்பு உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 10, 654 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 138 போ் குணமடைந்ததையடுத்து வியாழக்கிழமை அவா்கள் வீடு திரும்பினா். தற்போது 780 போ் சிகிச்சையில் உள்ளனா்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உள்பட 4 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் கரோனாவுக்கு இதுவரை பலியானோா் எண்ணிக்கை 203ஆக அதிகரித்துள்ளது.