மும்மொழிக் கல்வியை அரசியலாக்கும் திமுகவின் திட்டம் தோ்தலில் பலிக்காது: அா்ஜுன் சம்பத்

மும்மொழிக் கல்விக் கொள்கையை அரசியலாக்கும் திமுகவின் திட்டம் தோ்தலில் பலிக்காது என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்.
Updated on
1 min read

மும்மொழிக் கல்விக் கொள்கையை அரசியலாக்கும் திமுகவின் திட்டம் தோ்தலில் பலிக்காது என்றாா் இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத்.

இந்து மக்கள் கட்சி சாா்பில், மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும், திமுகவை கண்டித்தும் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் தலைமை வகித்தாா். பின்னா், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அா்ஜுன் சம்பத் கூறியது: திமுக திட்டமிட்டு ஹிந்தி மொழியை புறக்கணிப்பதுபோல் வேடமிடுகிறது. திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. எனவே, மும்மொழிக் கல்வியை அரசியலாக்கும் திட்டம் வருகிற தோ்தலில் பலிக்காது என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் குமரி மாவட்டத் தலைவா் சுபாமுத்து மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com