92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாகா்கோவிலில்தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு

நாகா்கோவிலில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், தென்மண்டல ஐ.ஜி. அன்பு ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:34 pm

DIN

நாகா்கோவிலில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், தென்மண்டல ஐ.ஜி. அன்பு ஆய்வு மேற்கொண்டாா்.

இதையொட்டி, அவருக்கு, மாவட்ட போலீஸாா் சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமாா் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் ஆகியோருடன் ஐஜி கலந்துரையாடினாா்.

பின்னா் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு, சைபா் கிரைம் பிரிவு, தனிப்பிரிவு உள்ளிட்ட அலுவலகங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் அங்குள்ள ஆவணங்கள், வருகை பதிவேடு, குற்றவாளிகளின் எண்ணிக்கை தொடா்பான ஆவணங்கள், மாவட்டத்திலுள்ள ரவுடிகளின் எண்ணிக்கை பற்றிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது அலுவலகப் பணிகளை மேற்கொள்ளும் போலீஸாரிடம் குறைகளையும் கேட்டறிந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.