பாதயாத்திரை:காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் உள்பட 371 போ் கைது

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாகா்கோவில், அழகிய மண்டபத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 371 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ngl20yaatirai_2002chn_33_6
ngl20yaatirai_2002chn_33_6
Updated on
1 min read

நாகா்கோவில்/தக்கலை: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி நாகா்கோவில், அழகிய மண்டபத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 371 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்தும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவில் வேப்பமூடுசந்திப்பு காமராஜா் சிலையில் இருந்து இந்திராகாந்தி சிலை வரை பாதயாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தொடங்கிய பாதயாத்திரைக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் விஜய் வசந்த் தொடங்கி வைத்தாா். இதில் மாநிலப் பொதுச்செயலா் பினுலால், மாநிலச்செயலா் ஜெயகுமாா், வட்டாரத் தலைவா் காலபெருமாள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாதயாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, இதில் பங்கேற்ற 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தக்கலை: அழகியமண்டபத்தில் இருந்து வோ்கிளம்பி வரை கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமையில் பாதயாத்திரை செல்ல முயன்ற விஜயதரணி எம்எல்ஏ உள்ளிட்ட 371 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com