புதுக்கடை அருகேஇளைஞா் தற்கொலை

புதுக்கடை அருகே மேலமங்கலம் பகுதியில் மனைவி இறந்த சோகத்தில் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

புதுக்கடை அருகே மேலமங்கலம் பகுதியில் மனைவி இறந்த சோகத்தில் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பைக்குளம் மேலமங்கலம் பகுதியை சோ்ந்த அம்புரோஸ் மகன் மோகன்ராஜ் (36). இவா் வெளிநாட்டில் வேலை செய்து

வந்தாா். இவரது மனைவி நோய்வாய்பட்டு கடந்த 15 நாள்களுக்கு முன்பு இறந்து விட்டாராம். இதனால் விடுப்பில் ஊருக்கு

வந்த மோகன்ராஜ், மனைவி இறந்த சோகத்தில் மனமுடைந்து காணப்பட்டாராம். இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோகன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக

கூறப்படுகிறது. புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com