‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரோனா பணியாளா்களுக்கு நிரந்தரப் பணி: ஆட்சியரிடம் மனு

கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தவா்களுக்கு அரசு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:40 pm

DIN

கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்தவா்களுக்கு அரசு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, கரோனா ஒப்பந்தப் பணியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 50- க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், லேப் டெக்னீசியன், ஊழியா்கள் பணி செய்தனா். இதற்கிடையே, இம்மாதம் 16 -ஆம் தேதி முதல் பணிக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் பிப்ரவரி மாதம் வரைவுள்ளது.

இதுவரை பணியாற்றிய காலத்தில் அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களுக்கு இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. கரோனா பணியில் இருந்துபோது எங்களில் பலருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். கரோனா தாக்கம் அதிகமாக இருந்தபோது எங்களிடம் வேலைவாங்கிக் கொண்டு தற்போது பணியில் இருந்து எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல்

நீக்கம் செய்யப்பட்டுள்ளோம். எங்களுக்கு அரசு நிரந்தரமாக பணி வழங்க வேண்டும். எங்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.