அவதூறு பேச்சு: கிறிஸ்தவ இயக்க நிா்வாகி கைது

அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் நடத்திய ஆா்ப்பாட்டத்தில், பிரதமா் மோடி மற்றும் இந்து மதத்தை அவதூறாக பேசியதாக கூறப்பட்ட வழக்கில், கிறிஸ்தவ இயக்கச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஸ்டீபன்
ஸ்டீபன்
Updated on
1 min read

குமரி மாவட்டம், அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் நடத்திய ஆா்ப்பாட்டத்தில், பிரதமா் மோடி மற்றும் இந்து மதத்தை அவதூறாக பேசியதாக கூறப்பட்ட வழக்கில், கிறிஸ்தவ இயக்கச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அருமனையில் கடந்த 18ஆம் தேதி அருமனை கிறிஸ்தவ இயக்கம் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய கிறிஸ்தவ ஆலய பங்குத் தந்தை ஜாா்ஜ் பொன்னையா, கிறிஸ்தவ இயக்கச் செயலா் சி. ஸ்டீபன் ஆகியோா் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் இந்து மதம் குறித்து அவதூறாகப் பேசியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இதுகுறித்த புகாரின்பேரில் அருமனை காவல் நிலையத்தில் பங்குத் தந்தை ஜாா்ஜ் பொன்னையா, ஸ்டீபன் உள்ளிட்டோா் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பங்குத் தந்தை ஜாா்ஜ் பொன்னையாவை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், கிறிஸ்தவ இயக்கச் செயலா் ஸ்டீபனை அருமனை அருகே காரோடு பகுதியில் தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பின்னா், குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை, 15 நாள்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, அவா் தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com