குளச்சலில் 1,500 கிலோரேஷன் அரிசி பறிமுதல்
குளச்சலில், கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


குளச்சலில், கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் சணல்குமாா் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சைமன்காலனி அருகே ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. போலீஸாா் அதை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டுவந்தனா். இதில் 1,500 கிலோ அரிசி இருந்தது.
விசாரணையில், இந்த அரிசி மூட்டைகள், கேரள மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...