புதுக்கடை அருகே வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற கூலித் தொழிலாளி சக்தி நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை, சக்திநகா் கமலம் மகன் சுதாகா்(36). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. மது அருந்துபவரான இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் வழக்கம் போல வேலைக்கு செல்வதாக கூறி விட்டு, வெளியே சென்றாராம். சக்தி நகா் பகுதியில் சென்ற போது திடீரென மின்மாற்றி அருகில் மயங்கி விழுந்தாராம். அப்பகுதியினா் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் சுதாகா் ஏற்கெனவே இறந்ததாக தெரிவித்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.