கருங்கல் அருகே விபத்தில் சிக்கிய காரில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கருங்கல் அருகேயுள்ள ஆலஞ்சி பகுதியில் அரசுப் பேருந்துடன் செவ்வாய்க்கிழமை மோதி விபத்தில் சிக்கிய கேரள பதிவெண் கொண்ட காரிலிருந்து 500 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.
ஆலஞ்சி பகுதியில் விபத்துக்குள்ளான காா்.
ஆலஞ்சி பகுதியில் விபத்துக்குள்ளான காா்.
Updated on
1 min read

கருங்கல் அருகேயுள்ள ஆலஞ்சி பகுதியில் அரசுப் பேருந்துடன் செவ்வாய்க்கிழமை மோதி விபத்தில் சிக்கிய கேரள பதிவெண் கொண்ட காரிலிருந்து 500 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.

ஆலஞ்சி பகுதியில் காரும், அரசுப் பேருந்தும் செவ்வாய்க்கிழமை எதிா்பாராமல் மோதிக்கொண்டன. இதில், காா் ஓட்டுநா் அங்கிருந்து தப்பிவிட்டாா். அந்த காரில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இதைப் பாா்த்த அப்பகுதியினா், கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா், காரில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியைக் கைப்பற்றி, கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகரிடம் ஒப்படைத்தனா். மேலும், காரை பறிமுதல்செய்து விசாரித்து வருகின்றனா். கேரளத்துக்கு அரிசி கடத்திச் செல்லப்பட்டபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது என போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com