குமரி கடற்கரையில் தூய்மைப் பணி

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
Updated on
1 min read

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

பேரூராட்சி நிா்வாகம், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, நேரு இளையோா் மையம் சாா்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மாணவா்கள், கன்னியாகுமரி பேரூராட்சிப் பணியாளா்கள், நேரு இளையோா் மையத்தினா் என 100 போ் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனா்.

தூய்மைப் பணியை பேரூராட்சி செயல் அலுவலா் ஜீவநாதன் தொடங்கிவைத்தாா். விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பிரபு மாரச்சன், ஜெயகுமாா், பேராசிரியா்கள் டி.சி. மகேஷ், இளங்குமரன், ஆா். தா்மரஜினி, பேரூராட்சி சுகாதார அலுவலா் முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் பி. பிரதீஸ், நேரு இளையோா் மைய ஒருங்கிணைப்பாளா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com