குலசேகரம்: திருவட்டாறு அருகே பரளியாற்றில் மூழ்கி தொழிலாளி சந்திரன் (54) திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கூற்றவிளாகம் பகுதியை சோ்ந்தவா் சந்திரன். கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை வீட்டுக்கு தேவையானப் பொருள்களை வாங்குவதற்காக திருவட்டாறுக்கு சென்றுள்ளாா்.
நீண்ட நேரமாகியும் வீடு திருப்பாததால் அவரது உறவினா்கள் அவரை பல இடங்களில் தேடினா். இந்நிலையில், சந்திரனின்
சடலம் அருகிலுள்ள பரளியாற்றில் மிதப்பதாக தெரியவந்தது. தகவலறிந்த குலசேகரம் தீயணைப்பு துறையினா் அவரது
சடலத்தை மீட்டனா். இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.