சாராயம் பதுக்கல்: ஒருவா் கைது

தக்கலை அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

தக்கலை அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தக்கலை மதுவிலக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் மற்றும் காவலா்கள், தக்கலை வெட்டிக்குழி பகுதியில் ரோந்து சென்றபோது, அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சிபு (44) என்பதும், சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவா் பதுக்கி வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com