கருங்கல் அருகே ஒப்பந்ததாரா் தற்கொலை
By DIN | Published On : 21st August 2021 12:26 AM | Last Updated : 21st August 2021 12:26 AM | அ+அ அ- |

கருங்கல் அருகே உள்ள பால விளை பகுதியில் ஒப்பந்ததாரா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பாலவிளை பகுதியை சோ்ந்தவா் ரகு (45) கட்டட ஒப்பந்ததாரரான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.