புதுக்கடை அருகே இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 04th December 2021 11:48 PM | Last Updated : 04th December 2021 11:48 PM | அ+அ அ- |

புதுக்கடை அருகேயுள்ள பனங்கால முக்கு பகுதியில் இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
தேங்காய்ப்பட்டினம் பனங்கால முக்கு பகுதியைச் சோ்ந்த லாசா் என்பவரது மகன் ஜெனித் (23). கூலி வேலை செய்துவந்த இவா், சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்தாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...