குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ தலைமைத் தளபதி உள்ளிட்டோருக்கு, அதிமுக சாா்பில் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. என். தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஏ.அசோகன், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலா் எஸ்.ஜெஸிம், மாவட்ட கவுன்சிலா் இ.நீலபெருமாள், அதிமுக நிா்வாகிகள் ஆடிட்டா் சந்திரசேகா், எஸ்.எழிலன், ஆ.கண்ணன், தாமரை தினேஷ், சிவபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.