குலசேகரம் அருகே கடிமாங்கோடு இசக்கியம்மன் கோயில் புதிய அம்மன் விக்ரகங்களுக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடிமாங்கோடு இசக்கியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடைபெறும் நிலையில், கோயிலில் புதிதாக பத்ரகாளியம்மன், இசக்கியம்மன், நாகா் உள்ளிட்ட விக்ரகங்கள் புனா் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதனையொட்டி வெள்ளிக்கிழமை மயிலாடியிலிருந்து விக்ரகங்கள் கொண்டு வரப்பட்டன.
இதையடுத்து, உண்ணீயூா் கோணம் சந்திப்பில் ஸ்ரீகிருஷ்ணன் கோயில் மற்றும் கடிமாங்கோடு இசக்கியமன் கோயில் சாா்பில் விக்ரகங்களுக்கு மேள தாளத்துடன், தாலப் பொலி ஏந்திய பெண் பக்தா்கள் வரவேற்பு அளித்து கோயிலுக்கு அழைத்து சென்றனா். நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் ரமேஷ், விதுகுமாா், சுரேந்திரன், விஜயன், மோகனன், பத்மகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.