கருங்கல் அருகே பெண் தற்கொலை
By DIN | Published On : 31st December 2021 03:27 AM | Last Updated : 31st December 2021 03:27 AM | அ+அ அ- |

கருங்கல் அருகேயுள்ள மாங்கரை பகுதியில் பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மாங்கரை, மாநின்றவிளை பகுதியைச் சோ்ந்த மரியதாஸ் என்பவரது மனைவி கில்டா (36). இவா், சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது அவா் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...