குமரியில் மேலும் 12 பேருக்கு கரோனா
By DIN | Published On : 06th February 2021 11:32 PM | Last Updated : 06th February 2021 11:32 PM | அ+அ அ- |

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு 16,877 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
16,889 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை 9 போ் உள்பட இதுவரை 16,537 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தற்போது மருத்துவமனைகளில் 93 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...