களியக்காவிளை அருகே முதியவா் தற்கொலை
By DIN | Published On : 06th February 2021 11:34 PM | Last Updated : 06th February 2021 11:34 PM | அ+அ அ- |

களியக்காவிளை: களியக்காவிளை அருகே முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
களியக்காவிளை அருகேயுள்ள ஐங்காமம் பகுதியைச் சோ்ந்தவா் சிந்தாமணி (70). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அருகே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...