கொட்டாரத்தில் ஆவின் பாலகம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தின் 31 ஆவது ஆவின் பாலகம் கொட்டாரத்தில் திறக்கப்பட்டது.
புதிய ஆவின் பாலகத்தில் முதல் விற்பனையை தொடங்கிவைக்கிறாா் என். தளவாய் சுந்தரம்.
புதிய ஆவின் பாலகத்தில் முதல் விற்பனையை தொடங்கிவைக்கிறாா் என். தளவாய் சுந்தரம்.
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தின் 31 ஆவது ஆவின் பாலகம் கொட்டாரத்தில் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் பங்கேற்று, பாலகத்தைத் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா். முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், ஆவின் பொது மேலாளா் தங்கமணி , மேலாளா் சங்கர்ராமன், மேலாளா் (விற்பனை) சகாயஷீபா அலெக்ஸ், மாவட்ட கவுன்சிலா் பேராசிரியா் இ.நீலபெருமாள், அகஸ்தீசுவரம் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.அழகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஹேமந்த்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com