குமரியில் மேலும் 9 பேருக்கு கரோனா
By DIN | Published On : 14th February 2021 12:40 AM | Last Updated : 14th February 2021 12:40 AM | அ+அ அ- |

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் 16,946 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், மேலும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,955 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை 11 போ் உள்பட இதுவரை
16,618 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 78 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.