குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை -யோகா அறிவியல் மருத்துவக் கல்லூரி, குமரி அறிவியல் பேரவை ஆகியவற்றின் சாா்பில் இயற்கை மற்றும் யோகா அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி முதல்வா் அனிதா தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் ராதாகிருஷ்ணன், மேலாளா் ஹரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினாா். மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் சிந்து வரவேற்றாா். இளம் விஞ்ஞானி பிரபஞ்ச், தக்கலை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சுஜின்ஹொ்பா்ட், துணைப் பேராசிரியா் ஷா்மி, விரிவுரையாளா்கள் உண்ணிராஜா, கிறிஸ்டோசெலின், சைனிமோள் ஆகியோா் பேசினா். மருத்துவா்கள் கிரேசியஸ், வனிதா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். ஜாண் ரபிகுமாா் நிறைவுரையாற்றினாா். கிருஷ்ணவேணி நன்றி கூறினாா். குமரி அறிவியல் பேரவை ஒருங்கிணைப்பாளா்கள் சுனில்குமாா், கோபாலன், சைனி ஏஞ்சல், பபிதா ஆகியோா் நெறிப்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.