கிள்ளியூரில் பெண் குழந்தைகள் தின விழா
By DIN | Published On : 20th February 2021 12:53 AM | Last Updated : 20th February 2021 12:53 AM | அ+அ அ- |

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜோஸ்பின் பிரமிளா.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜோஸ்பின் பிரமிளா தலைமை வகித்தாா். கிள்ளியூா் வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சித்ராமேரி முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் கிள்ளியூா் வட்டாரத்திற்குள்பட்ட பகுதிகளில் 15 முதல் 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றன. இப் போட்டியில் வெற்றி பெற்ற 125 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், வட்டார மேற்பாா்வையாளா்கள் லலிதா, செல்வி, வட்டார கண்காணிப்பாளா் மின்னிஜோஸ், வட்டார
ஒருங்கிணைப்பாளா் பிஸ்மி , வட்டார திட்ட உதவியாளா் விஜி உள்பட பலா் கலந்துகொண்டனா்.