மாா்த்தாண்டம் அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் வெட்டுவெந்நி சாஸ்தா கோயில் அருகே வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது , அங்கு ஆட்டோவுடன் இருவா் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தனராம். அவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், குழித்துறை அருகே கழுவன்திட்டையைச் சோ்ந்த வேலப்பன் மகன் மது (51), குஞ்சுமணி மகன் பிஜு (39) என்பதும், ஆட்டோவில் கஞ்சா பதுக்கி வைத்து அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்ததாம்.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 2 கால் கிலோ கஞ்சாவை மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.
மற்றொருவா் கைது: கருங்கல் போலீஸாா் எட்டணி பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவா் கப்பியறையைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பெல்பின் ராஜ் (வயது 24) என்பதும், கஞ்சாவை அவா் பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.