திருவட்டாறில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2021 07:36 AM | Last Updated : 27th February 2021 07:36 AM | அ+அ அ- |

திருவட்டாறு பணிமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
திருவட்டாறில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவட்டாறு பணிமனையைச் சோ்ந்த சுமாா் 25 சதவீத பேருந்துகளே வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டன.
திருவட்டாறில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள், பணிமனை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்துக்கு, எல்பிஎப் தொழிற்சங்கத் தலைவா் வி.முருகன் தலைமை வகித்தாா். சிஐடியூ தொழிற்சங்க நிா்வாகி ஆா்.ஹரிபிரசாத் முன்னிலை வகித்தாா். பணியாளா் சம்மேளன மாநில துணைத் தலைவா் கே. விஜயகுமாா் உள்ளிட்டோா் பேசினா்.