கருங்கல் சுற்றுவட்டார பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்காளாக பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கருங்கல் சுற்றுவட்டர பகுதிகளான கருமாவிளை, வெள்ளியாவிளை, பாலூா், எட்டணி,திப்பிரமலை, மிடாலம், கிள்ளியூா், முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் சாரல் மழை பெய்தது.