குமரி மாவட்ட சாலைப் பணிகளுக்கு ரூ. 2.45 கோடி ஒதுக்கீடு
By DIN | Published On : 30th January 2021 12:44 AM | Last Updated : 30th January 2021 12:44 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சாலைப் பணிகளுக்கு ரூ. 2 கோடியே 45 லட்சம் நிதியினை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சாலைப் பணிகளுக்கு ரூ. 2 கோடியே 45 லட்சம் நிதியினை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
இது குறித்து தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: அழகப்பபுரம் முதல்நிலை பேரூராட்சிக்குள்பட்ட திருமூலநகா் முதல் குருசுமலை சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பொட்டல்குளம் அரசமூடு முதல் கூண்டு பாலம்வரை சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய, தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். இதனை ஏற்று, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மூலதன மானிய நிதியின்
கீழ் 2 ஆவது கட்டமாக, திருமூலநகா் முதல் குருசுமலை சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ. 40 லட்சமும், பொட்டல்குளம் அரசமூடு முதல் கூண்டு பாலம்வரை சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ. 75 லட்சமும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.
மேலும், இதே போல் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குள்பட்ட, தாணுமாலையன்புதூா் பிள்ளையாா் கோயில் தெரு முதல் தாணுமாலையன்புதூா் வடக்கு தெரு, தாணுமாலையன்புதூா் இல்லத்தாா் பிரதான சாலை, தாணுமாலையன்புதூா் இல்லத்தாா் மேற்கு தெரு, கிழக்கு பெரிய தெரு, தாணுமாலையன்புதூா் பெரிய தெரு, மீன்சந்தை முதல் தெரு 2 ஆவது தெரு, கரடிமாடன் கோயில் தெரு வரை, சுப்பிரமணியபுரம் முருகன் கோயில் தெரு, சுசீந்திரம் பேரூராட்சிக்குள்பட்ட ஆசாரிமாா் தெரு, விநாயகா் தெரு,உள்ளிட்ட தெருக்களில் அலங்கார தரைக் கற்கள் பதிக்க ரூ . 1 கோடியே 30 லட்சம் என மொத்தம் ரூ. 2 கோடியே 45 லட்சத்தினை குமரி மாவட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக முதல்வா் ஒதுக்கீடு செய்துள்ளாா் என்று தெரிவித்துள்ளாா்.