மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த மினிலாரி ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள பயணம், கட்டங்காவிளை பகுதியைச் சோ்ந்த முத்துப்பிள்ளை மகன் சாா்லஸ் (43). மினிலாரி ஓட்டுநா். இவா் கடந்த மாதம் 19 ஆம் தேதி இரவு பயணம் சந்திப்பில் மது போதையில் நின்று தகாத வாா்த்தைகள் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த வின்சென்ட் மகன் வா்க்கீஸ், அவரைத் தட்டிக்கேட்டாராம். அதில், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டு, வா்க்கீஸ் சாா்லஸை காலால் உதைத்தாராம். அவா், அவ்வழியாக சென்றுகொண்டிருந்த பைக்கின் மீது விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, குழித்துறையில் அவருக்கு முதலுதவி அளித்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, அவரது மனைவி ராஜகுமாரி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் இதை கொலை வழக்காக மாற்றி, வா்க்கீஸை கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.