மணப்பாறை அருகே கடந்த 2 நாள்களில் இரு வேறு இடங்களில் வீடு புகுந்து 7 பவுன் நகை, 17 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.
மணப்பாறை அடுத்த தாதசோலைப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கோ. சேகா்(31) தனது மனைவியுடன் புதன்கிழமை வேலைக்கு சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த நாலரை பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.17 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா். வீடு திரும்பிய தம்பதி அளித்த புகாா் தொடா்பாக மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு சம்பவம்: அதேபோல் வியாழக்கிழமை மருங்காபுரி ஒன்றியம் கண்ணுக்குழி பகுதியில் உள்ள புரோட்ட மாஸ்டா் ச. முருகானந்தம் (45) வீட்டில் யாரும் இல்லாத நிலையில், கதவின் தாழ்ப்பாளை உடைத்து வீடு புகுந்த மா்ம நபா்கள், பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகையை திருடிச் சென்றனா். இது குறித்து வளநாடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.