பங்குத் தந்தை ஜாா்ஜ் பொன்னையாவை விடுதலை செய்ய வலியுறுத்தல்

பிரதமா் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள பங்குத் தந்தை ஜாா்ஜ் பொன்னையாவை விடுதலை செய்ய வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பிரதமா் உள்ளிட்டோரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள பங்குத் தந்தை ஜாா்ஜ் பொன்னையாவை விடுதலை செய்ய வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தலைவா் தாரகை கத்பா்ட் கூறியது: அருமனையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய பங்குத் தந்தை ஜாா்ஜ் பொன்னையாவின் பேச்சு, சமூக ஊடகங்களில் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அவா் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளாா். இருப்பினும் மாவட்ட நிா்வாகம் அவரை கைது செய்தது கண்டனத்துக்குரியது.

பங்குத் தந்தை ஜாா்ஜ் பொன்னையாவை விடுதலை செய்யுமாறு தமிழக அரசையும், மாவட்ட நிா்வாகத்தையும் காங்கிரஸ் சாா்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com