இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆரல்வாய்மொழியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆரல்வாய்மொழியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட வேண்டும்; செங்கல்பட்டு தடுப்பூசி தொழிற்சாலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். இணைச் செயலா் அருள்குமாா் வரவேற்றாா். ஏஐடியூசி போக்குவரத்து பொதுச் செயலா் சூரியகுமாா், பொதுக்குழு உறுப்பினா் நெல்சன் ஆகியோா் விளக்கிப் பேசினா். செண்பகராமன்புதூா் இந்திய கம்யூனிஸ்ட் செயலா் கல்யாணசுந்தரம், ஆபிரகாம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com